அம்மனுக்கு மாவிளக்கு

அம்மனிடம் ஏதாவது வேண்டுதல் வைத்து, அதை நிறைவேற்ற மறந்து போய் இருந்தால் அல்லது யாராவது நமக்காக வேண்டுதல் வைத்து அதை நிறைவேற்ற தவறி இருந்தால் அதனால் ஏற்படும் தோஷங்கள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்காக அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவார்கள்.

நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றிக்கடனாக அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். அம்மனுக்கு ஏதாவது நேர்த்திக்கடன் இருக்குமோ, அதனால் அம்மனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற எண்ணம் இருப்பவர்களும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.

மாவிளக்கு

– பச்சரிசியை சுத்தமாக கழுவி, தண்ணீரை நன்கு வடித்து விட்டு, நிழலில் லேசாக காய வைக்க வேண்டும்.

  • அரிசியில் லேசான ஈரப்பதன் இருக்கும் போது அதை மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசி மாவில் ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசி மாவின் அளவிற்கு ஏற்ப வெல்லத்தை எடுத்து லேசாக பாகு காய்ச்சி, வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஏலக்காய், சுக்கு பொடி கலந்த அரிசி மாவில் சிறிது சிறிதாக வெல்ல பாகினை ஊற்றி, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • அதிகம் இறுக்கம் இல்லாமல் சற்று தளர்வான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும்.
  • அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றும் முறை :
  • – ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ அல்லது மாலையிலோ கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ மாவிளக்கு ஏற்றலாம்.
  • பிசைந்து வைத்த மாவினை கொண்டு விளக்கு போல் செய்து கொள்ள வேண்டும்.
  • வாழை இலையின் மீது அந்த விளக்கை வைத்து, அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
  • மாவிளக்கிற்கு முன் பூக்கள் வைத்து, அந்த விளக்கில் அம்பாள் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபட வேண்டும்.
  • நம்முடைய வேண்டுதலை அம்மனிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும்.
  • மாவிளக்கில் இருக்கும் திரி முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு அல்லது 20 நிமிடங்கள் எரிந்த பிறகு அந்த மாவினை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து, நாமும் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here