மக்களுக்காக உழைப்பவர்களை நாம் ஏன் பதவியிலிருந்து நீக்க வேண்டும்?

கோலாலம்பூர்:

நாட்டின் பொருளாதாரம் மற்றும் உலக அளவில் நாட்டின் நற்பெயர் மேம்பட்டு வரும் வேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கத்தின் மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் வாக்காளர்கள் அதிக நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

‘தி மலேசியா பிரஸ்’ (TheMalaysiaPress) டிக்டாக் ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட நேர்காணல் காணொளி ஒன்றில், நெகிரி செம்பிலான், பரோய் (Paroi) சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 63 வயதான வாக்காளர் நூருல் சாடா அப்துல் ரஹ்மான் (Nurul Saadah Binti Abdul Rahman) தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பாரிசான் நேஷனல் கூட்டணியில் பல தசாப்தங்களாக அங்கம் வகித்த மா.சீ.சா, கெராக்கான் போன்ற கட்சிகளும் சீனச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், டி.ஏ.பியை மட்டுமே குறிவைத்து விமர்சிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அன்வாரின் ஆட்சியில் மலேசியாவின் பொருளாதாரம், ரிங்கிட்டின் மதிப்பு மற்றும் உலகளாவிய அங்கீகாரம் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வெறும் அரசியல் சாயங்களைப் பார்க்காமல், நாட்டின் நலனையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நல்ல தலைவர்களுக்கே முதிர்ச்சியான வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here