PKR கட்சிக்குத் திரும்புவதை உறுதிசெய்த சேவியர் ஜெயகுமார்

 ஓரங்கட்டப்பட்டதாக உணரும் கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்று PKR தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, முன்னாள் PKR துணைத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கட்சிக்குத் திரும்புவதை உறுதி செய்துள்ளார். PKR கட்சிக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்கப்பட்டபோது, ​​சேவியர் சுருக்கமாக “ஆம்” என்று பதிலளித்தார்.

சனிக்கிழமையன்று, PKR-இன் தேசிய மாநாட்டில் ஆற்றிய தனது முக்கிய உரையில், அன்வார் கட்சியின் மூத்த தலைவர்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்கள் கட்சிக்குத் திரும்பி அதன் சீர்திருத்தப் போராட்டத்தைத் தொடருமாறும் வலியுறுத்தினார்.PKR கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​அப்போதைய பிரதமர் முஹைதீன் யாசினை ஒரு சுயேச்சையாக ஆதரிப்பதற்காக, 2021-ல் சேவியர் PKR கட்சியிலிருந்து விலகினார்.

2022இல், அவர் பார்ட்டி பங்சா மலேசியாவில் சேர்ந்தார். ஆனால் அதற்கான காரணத்தை வெளியிட மறுத்துவிட்டார்.இதற்கிடையில், முன்னாள் துணைத் தலைவர் தியான் சுவா மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், குறிப்பாக ‘ரிஃபார்மாசி’ இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளதாகவும் PKR செய்தி இணையதளமான ‘சுவாரா கெடிலான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக தியான் சுவா PKR கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பத்து முனைப் போட்டியில் PKR-ன் பி. பிரபாகரன் அத்தொகுதியை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here