இந்த 5 பொருட்களை சதுர்த்தியில் பிள்ளையாருக்கு படைக்க மறந்துடாதீங்க

விநாயகருக்கு படைக்க வேண்டிய 5 பொருட்கள் :

1. அருகம்புல் – விநாயகர் வழிபாட்டில் மிக முக்கியமாக பங்கு வகிப்பது அருகம்புல். அனலாசுரன் என்ற அசுரனை வென்றபின் விநாயகரின் உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தை போக்கியது அருகம்புல். இதனால் இது விநாயகருக்கு மிகவும் விருப்பமானதாக சொல்லப்படுகிறது. விநாயகருக்கு அருகம்புல் படைத்து வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை சக்திகள், மனதில் இருக்கும் கவலைகள் ஆகியவை நீங்கி வாழ்வில் நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

2. எருக்கம் பூ – வெள்ளை எருக்கம் பூவை மாலையாக கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இத தீய சக்திகளை விரட்டி, எதிர்மறை ஆற்றல்களை தடுக்கும். பயத்தை போக்கி, தைரியத்தை தரும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மலராக எருக்கம் பூ கருதப்படுகிறது.

3. பொரி, கடலை – பொரி, கடலை ஆகியவை தூய்மையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. இது இறைவனிடம் முழுவதுமாக சரணடைவதை குறிப்பதாகும். விநாயகர் மட்டுமின்றி, சரஸ்வதி தேவி உள்ளிட்ட பல தெய்வங்களுக்கும் அவல், பொரி, கடலை படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இது எளிமையான, அதே சமயம் சிறந்த நைவேத்தியமாக கருதப்படுகிறது.

4. வாழைப்பழம் – தெய்வீக வழிபாட்டில் மிக முக்கியமா பங்கு வகிப்பது வாழைப்பழம் ஆகும். சுலபமாக கிடைக்கக் கூடிய பழம். வாழைப்பழத்தின் விதையை மண்ணில் எரிந்தால் அது மீண்டும் முளைக்காது. அது போல பிறவியற்ற முக்தி நிலையை அருள வேண்டும் என இறைவனிடம் வேண்டுவதன் அடையாளமாகவே அனைத்து தெய்வங்களுக்கும் வாழைப்பழம் படைத்து வழிபடுகிறோம். வாழைப்பழம் நேரமாக தொடப்படாத பழம் என்பதால் எச்சில் படாத பழமாக, தூய்மையின் அடையாளமாக, தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.

5. வெற்றிலை பாக்கு – வெற்றிலை பாக்கு இணைந்ததை தாம்பூலம் என குறிப்பிடுவோம். இது இறைவனுக்கு தட்சிணை அல்லது காணிக்கை கொடுப்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. அதே போல் வெற்றிலை பாக்கு, ஒருவரை முறையாக அழைப்பதற்கு பயன்படுத்தக் கூடியதாகும். இது மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. அதனால் இறைவனை நம் வீட்டிற்கு அழைத்து, அவரை வழிபடுவதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. இது மங்களத்தின் அடையாளமாகும்.

இந்த ஐந்து பொருட்களையும் மறக்காமல் பிள்ளையாருக்கு படைத்து வழிபட்டால் அவரது அருள் முழுமையாகக் கிடைக்கும். அதே போல் வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், எடுக்கும் முயற்சிகள், காரியங்கள் என அனைத்திலும் தோல்விகள், தடைகள் ஆகியவற்றை சந்தித்து வருபவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை மனதார வேண்டி, அவருக்கு சிதறுக் காய் உடைத்தால் அந்த தேங்காய் உடைந்த சிதறுவதை போல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களும், தடைகளும் பொடி பொடி சிதறி ஓடி விடும் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here