மலேசியாவில் குழந்தை நல மருத்துவர்கள் பற்றாக்குறை: சுகாதார அமைச்சு கவலை!

கோலாலம்பூர்:

மலேசியாவில், குழந்தை நலத்தில், துணைச் சிறப்புத் தகுதியுள்ள குடும்ப மருத்துவ நிபுணர்கள், ஐந்து பேர் மட்டுமே இருப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மூன்று பேர், தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக, சபா மற்றும் சரவாக் போன்ற மாநிலங்களில், திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கெப்லி அகமட் (Datuk Seri Dzulkefly Ahmad) அவர்கள், நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப, தெரப்பிஸ்டுகள் (therapists) குறைவாக இருப்பதும், நிபுணர்களின் சமமற்ற விநியோகம் மற்றும் கிராமப்புறங்களில், குறைவான வசதிகள் போன்ற சவால்களை, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளில் சரிசெய்ய, சுகாதார அமைச்சு, டெலிரெஹபிலிடேஷன் (telerehabilitation), பெற்றோர் குழு வழிகாட்டல்கள், சமூகத் நடவடிக்கைகள், பணியாளர்களைச் சமமாகப் பிரித்து அனுப்புதல் போன்ற, நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.

இதனிடையே, 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த நிபுணர் சேவை குழுமங்களை (integrated specialist service clusters) அமைப்பதற்கும், குறிப்பாக, கிராமப்புறங்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான ஆரம்பகாலத் தலையீடுகளை வலுப்படுத்துவதற்கும், அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here