ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பு விகிதத்தை 11 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காட்டிற்கான கால அவகாசம் ஜூன் 2022 வரை நீட்டிக்கப்படும். நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2022 ஐ தாக்கல் செய்யும் போது, இந்த முயற்சியில் 2 பில்லியன் வெள்ளி தொகையை உள்ளடக்கியது என்றார்.
நீடித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் விளைவாக, குறிப்பாக பணப்புழக்க மேலாண்மையின் அடிப்படையில் மக்கள் எதிர்கொள்ளும் நிதித் தடைகளை அரசாங்கம் புரிந்துகொள்கிறது. மக்களின் கைகளில் பணத்தை அதிகரிக்க, EPF குறைந்தபட்ச பங்களிப்பு விகிதத்தை 11% இருந்து 9% குறைக்கும் காலத்தை ஜூன் 2022 வரை நீட்டிக்கும் என்று அவர் கூறினார்.
2022 பட்ஜெட்டில் ‘Keluarga Malaysia, Makmur Sejahtera’, என்ற கருப்பொருளுடன் அரசாங்கம் குறிப்பாக மானியங்கள், உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகளுக்காக RM31 பில்லியனுக்கும் அதிகமாக வழங்கியுள்ளது.




















