மலேசியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அண்மையக் காலமாக கட்டுப்பாட்டில் இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சில தினங்களாக அதிகரித்து வந்த வேளை அதன் தாக்கம் இரட்டை இலக்கத்திற்கு மாறியிருப்பது நம்மில் பலருக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்திருக்கிறது. இன்று மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் மொத்தம் 42 பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 115ஆகவே நீடிக்கிறது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7619 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6083 ஆக பதிவாகியிருக்கும் வேளையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,421ஆக பதிவாகியுள்ளது.