கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.

இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெகிரி ஙெ்ம்பிலானில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு பொதுநலச் சேவையாளர் பரமசிவம், அவரின் மனைவி திருமதி ராதா இருவரும் மாநில அளவில் ஏற்பாடு செய்தனர்.

இதில் முதல் தமிழ்ப்பள்ளியாக கோலப்பிலா தமிழ்ப்பள்ளியைச் தேர்வு செய்து, நேற்று முன்தினம் கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் இக்கருத்தரங்கை ஏற்பாடு ஙெ்ய்திருந்தனர்.

கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு நாட்டின் பிரபல வழக்கறிஞர் நித்யா பாலியல் வன்முறை குறித்து மிகவும் சிறப்பாக விளக்கினார்.

இக்கருத்தரங்கில் மாணவர்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து எப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது, பெற்றோர் எப்படி தங்கள் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்பது என்பதைத் துல்லியமாக விளக்கினார்.

தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கும்  பெற்றோருக்கும் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்   நடத்தப்படும் அதே வேளையில் மாநிலத்தில் அமைந்துள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இக்கருத்தரங்கை ஏற்பாடு ஙெ்ய்ய ஆலோசித்து வருவதாகவும்  பரமசிவம் கூறினார்.

இக்கருத்தரங்கத்தில் கோலப்பிலா தமிழ்ப்பள்ளியின் ஆறாம் ஆண்டு  மாணவர்கள் உட்பட அவர்களின்  பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here