ஒன்பது முறை நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு இறுதியில்தான் நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும்.
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாக சுற்ற வேண்டும். ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.
எனவே இந்த ஏழு கிரகங்களையும் நாமும் வலமாகச் சுற்ற வேண்டும். அதே நேரத்தில் ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக வலம் வருபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்.