ரூ.150 கோடி இழப்பு…

நேற்று முதல் சினிமா படப்படிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும் வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்படிப்புகளும் 60 டி.வி. தொடர் படப்படிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்புகிறார்கள். படப்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே முன்னணி நடிகர்களின் படப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. தமிழ் பட உலகம் 31ஆம் தேதி வரை ரூ.150 கோடி இழப்பைச் சந்திக்கும் என்று தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொரோனாவால் இந்தி திரையுலகில் ரூ.850 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here