கோலாலம்பூர், மார்ச் 28-
சீனாவின் வூஹான் நகரை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது ஏன்? சீனாவின் இதர பெரு நகரங்களுக்கு கொரோனா பரவாத காரணம் என்ன என்பதுதான் தற்போதைய மிக முக்கியமான சந்தேகமாக கொரோனாவைக் காட்டிலும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.
வூஹான் நகரம் அமைந்திருக்கும் ஹூபே மாவட்டத்தைக் கடந்து சீனாவின் வேறு எந்த மாவட்டத்திற்கும் கொரோனா பரவவில்லை.
ஆறு கோடி மக்கள் வசிக்கும் வூஹான் மாவட்டத்தைக் கடந்து சீனாவின் வேறு எந்தப் பிரதேசத்திற்கும் கொரோனா போகவில்லை.
இது எப்படி சாத்தியமாகும்?
மாற்று மருந்து இருந்தால் ஒழிய இது சாத்தியமாகாது.
சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா சுவடு அடியோடு இல்லை.
சீனாவின் யாங் சி நதிவழிப்பயணத்தில் வூஹானுக்கு அடுத்து உள்ள எந்த நகருக்கும் கொரோனா போகவில்லை.
அதிக மக்கட் தொகையைக் கொண்ட ஷாங்காய் நகருக்கும் கொரோனா போகவில்லை.
ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் நிறைந்த நாடு இத்தாலி. இத்தாலி முழுக்க உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் 70 விழுக்காட்டுப் பங்குரிமையை சீனா வைத்துள்ளது.
இதன் காரணமாக வூஹான் நகரைச் சேர்ந்த சீனத் தொழிலாளர்கள் இத்தாலியில் குவிந்து கிடக்கின்றனர்.
இவர்களின் பயணத்திற்காகவே ரோம் நகரில் இருந்து வூஹானுக்கு நேரடி விமானச் சேவை கூட வழங்கப்பட்டு வருகிறது.
இத்தாலியில் வெகு விரைவாக கொரோனா பரவுவதற்கு வூஹான்-ரோம் விமானப் பயணங்களும் காரணமாக அமைந்துள்ளது.
வூஹானிலிருந்து ரோம் வரை பயணித்த கொரோனாவால் சீனாவின் இதர நகரங்களுக்கு பரவ முடியவில்லை என்பது ஆச்சரியமான உண்மைதான்.
வெறும் முகக் கவசத்தை மட்டுமே அணிந்த நிலையில் சீன அதிபர் வூஹான் நகருக்கு வருகை தந்தது புருவத்தை உயர்த்தும் செயலாகவே உள்ளது.
இப்போது வூஹான் கொரோனாவிலிருந்து விடுபட்டிருப்பதாக சீன அரசாங்கம் சொல்கிறது.
உலகை உலுக்கும் கொரோனா 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை உலகம் முழுவதும் பறித்திருக்கிறது.
இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரிட்டன் போன்ற நாடுகள் கொரோனா உயிர்ப்பலியால் திக்கு முக்காடி வருகின்றன.
தற்போது உலக வல்லரசான அமெரிக்காவும் கொரோனா உயிர்ப்பலியால் திக்கு முக்காடி வருகிறது.
நடப்பு விபரீதங்கள் அனைத்துமே சீனாவின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
சீனாவின் உள்நோக்கம் என்னவாக இருக்கும்? இத்தனை இடர்பாடுகள் மத்தியில் வூஹான் நகரை உயர்த்திப் பிடிக்கும் வேலையை சீனா தொடங்கியிருக்கிறது.
சீனாவுக்கு அப்படி என்னதான் திட்டம் உள்ளது?
கத்திரி முத்தினால் கடைக்கு வரத்தானே செய்யும்! சீனக் கத்திரி என்பதால் சீக்கிரமே சந்தைக்கு வரும் என நம்புவோம்.