விதிமுறையை மக்கள் கடைபிடிக்கவில்லை பாயா தெருபோங் சந்தை மூடப்பட்டது

பாயா தெருபோங் சந்தை மூடப்பட்டது

ஜோர்ஜ் டவுன், மார்ச் 30-

ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் மூன்று அடியாவது விலகி நிற்க வேண்டும் என்ற சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்காத காரணத்தால் பினாங்கு பாயா தெருபோங் சந்தை இழுத்து மூடப்பட்டது.

ஆயர் ஈத்தாம் சந்தைக்கு அருகில் உள்ளது பாயா தெருபோங் சந்தை.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கக் கூடாது என மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

பாயா தெருபோங் சந்தைக்கு வந்த பொதுமக்கள் இந்த புதிய விதிமுறையைக் கடைபிடிக்கவில்லை.

சந்தையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகள் சந்தையை காலவரையின்றி மூடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here