சீனாவின் 20,000 முகக்கவசங்களை மலேசியா பெற்றுக்கொண்டது

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின்

புத்ராஜெயா, மார்ச் 31-

 

சீன நிறுவனமான பாய் தியான் 20,000 முகக்கவசங்கைளை வழங்கியிருக்கிறது. இவற்றை மலேசிய உள்துறை அமைச்சகம் பெற்றுக்கொண்டிருப்பதை  உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் உறுதிப்படுத்தினார்.

 

ஓர் அரசியல் புரிந்துணர்வின் அடிப்படையில் இவற்றை நேரில் வழங்கிய  சீனாவின் பாய் தியான் நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

உள்துறை அமைச்சின் கீழ் பல பிரிவுகள் இருக்கின்றன. அப்பிரிவுகளில் நிறையபேர் பணிபுரிக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு முகக்கவசங்கள் இன்றியமையாததாகும் என்றார் அவர். 

 

மார்ச் 28 ஆம் நாளிலும் பாதுகாப்பு, மருத்துவப் பொருட்களை இதே நிறுவனம் உள்துறை அமைச்சிடம் வழங்கியிருக்கிறது.

 

இப்பொருட்கள் யாவும் மலேசியாவுக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக மலேசியவுக்கான சீன தூதர் தெரிவித்தார்.

 

இதற்கு முன்னரும் பல சீன நிறுவனங்கள் முகக்கவசங்களை தனிப்பட்ட முறையிலும் அனுப்பியிருக்கின்றன என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here