சிலாங்கூர் தாமான் புக்கிட் தெராத்தாய், ரவாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நெடுங்காலமாக சித்ரா பெளர்ணமி விழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. இவ்வாண்டு கோவிட்-19 தாக்கத்தினால் வரும் 7.5.2020 செவ்வாய்க்கிழமை சித்ரா பெளர்ணமி திருவிழா நடைபெறாது என்று ஆலய செயலாளர் கே.பாலசுந்தரம் தெரிவித்தார்.
அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அவர் வலியுறுத்தியதோடு. சித்ரா பெளர்ணமியன்று அனைவரும் வீட்டிலேயே பூஜை செய்து அம்பாளின் அருளை பெறுமாறு கேட்டுக் கொண்டார்.