கோம்பாக், மே. 17-
கோம்பாக் டோல் சாவடியில் அதிகமான கார்கள் இருப்பதாக வெளி வந்த செய்தியில் உண்மை இல்லை என்று அங்கு சோதனையில் ஈடுப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைய தளம் ஒன்றில், கோம்பாக் டோல் சாவடியில் அதிகமான கார்கள் பகாங், குவாந்தான், மெந்தகாப் போன்ற மாவட்டங்களுக்குச் செல்வதாக தகவல் வெளியாகியது.
ஆனால் அங்கு அப்படியொரு சூழ்நிலை இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பாலேக் கம்போங் செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இருந்தாலும் பல வாகனமோட்டிகள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல முயல்கின்றனர். அவர்களை போலீசார் திருப்பி செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.