புத்ராஜெயா, மே 19-
இன்று கோவிட் தொற்றுக்கு 37 பேர் இலக்காகியுள்ள வேளையில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இது வரை மொத்த இறப்பின் எண்ணிக்கை 114ஆக பதிவாகியுள்ளது. இன்று மொத்தம் 31 பேர் குணமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,978ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 5,646 பேர் குணமடைந்துள்ளனர். 1, 218 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.