கோவிட்- 19 வைரஸ் தொற்று கண்டிருந்த அதிகாரி ஒருவர் கலந்து கொண்ட கூட்டத்திற்குத் தலைமையேற்றதை அடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக அவருக்கு இந்தத் தொற்று கண்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை தொடங்கி அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவருடன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு தங்கள் வீடுகளில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அமைச்ங்ரவை தொடர்புடைய கூட்டம் கடந்த புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களிலும் இந்தத் தொற்றின் பாதுகாப்பு அம்ங்ங்கள் முறைப்படி கடைப்பிடிக்கப்படும்.கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பர் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.