கோவிட் 19- இன்று 187 பேர் பாதிப்பு

மலேசியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அண்மையக் காலமாக கட்டுப்பாட்டில் இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சில தினங்களாக அதிகரித்து வருகின்றன. இன்று மட்டும் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் மொத்தம்  62  பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 115ஆகவே நீடிக்கிறது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,604 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,041 ஆக பதிவாகியிருக்கும் வேளையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,448ஆக பதிவாகியுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் ஐந்து பேருக்கு  சுவாச உகபரணங்கள் தேவை ப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here