நாய் வாயில் “டேப்”! கேரளாவில் மீண்டும் நடந்த பரிதாப சம்பவம்!

சுமார் மூன்று வயதுடைய ஒரு நாயின் வாயில்  இரண்டு வாரங்களாக டேப்பைக் கொண்டு கட்டியிருப்பதைக் கண்டு மீட்கப்பட்டது.

திருச்சூரில் சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய் பசி வேதனையால் அங்கும் இங்கும் சுற்றித்திருந்தது. மேலும் ஒல்லூர் சந்திப்பில்(PAWS) உறுப்பினர்களால் அந்த நாய் கண்டு பிடிக்கப்பட்டு, அந்த நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த நாயை மீட்கும் பொழுது வாயில் டேப் கட்டப்பட்டிருந்தது.

அந்த டேப் ஒரு மடங்கு சுற்றப்பட்டிருந்தது என்று நங்கள் நினைத்தோம் ஆனால் அந்த டேப் பல மடங்கு சுத்தப் பட்டிருந்தது, மிகவும் இறுக்கமாக கட்டப்பட்டு காய மடைந் திருந்து மூக்கை சுற்றி எலும்புகள் தெரிந்தது என்றும் , நாங்கள் டேப்பை அகற்றியவுடன், நாய் இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்தது, என்று திருச்சூர் (PAWS)  செயலாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here