புக்கிட் புருந்தோங் -புக்கிட் செந்தோசா பிரதான சாலையில் விபத்து; இருவர் பலி

உலு சிலாங்கூர்:

ங்குள்ள புக்கிட் புருந்தோங் டோல் பிளாசாவிற்கு அருகேயுள்ள புக்கிட் புருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசா இடையேயான பிரதான சாலையில், நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பிலி இரவு 10.10 மணிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு, துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறுனார்.

உடனே புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் ஏழு பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“முதற்கட்ட தகவல்களின்படி, விபத்தில் டேங்கர் லோரி, சாலையோரத்தில் சேதமடைந்த ஹூண்டாய் அக்சென்ட் வாகனம் மற்றும் டெமாக் EX90 மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்மந்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் மேலதிக தகவல்களை வெளியிடுவர் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here