சீனாவில் கனமழைக்கு 20 பேர் பலி

சீனாவின் வுஹான் , சுற்றுலாத்தலமான யாங்ஸூஹோ உள்ளிட்ட மாநிலத்தில் கடந்த 2ஆம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 8 மாநிலத்தில்ங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்புள்ள பயிர்கள் நாசமானதோடு, 2,800 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

தென்மேற்கு மாநிலத்தில்  8 பேர் உள்பட மொத்தம் 20 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்களோடு போலீசாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாங்ஸூஹோ மாநிலத்தில் ஆயிரம் ஓட்டல்கள், 5 ஆயிரம் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுற்றுலா பயணிகளும், கிராம மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை வெள்ளத்தால் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி உள்ளன. பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here