700 புலம்பெயர் தொழிலாளர்களை தனி விமானங்களில் உபி அனுப்பிய அமிதாப் பச்சன்

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தனி விமானங்களை ஏற்பாடு செய்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார்.

மும்பையில் தவித்து வந்த 700 புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப் பிரதேசம் அனுப்பி வைக்க 4 தனி விமானங்களை அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளார்.

700 புலம்பெயர் தொழிலாளர்களும் 4 விமானங்கள் மூலம் உ.பி.யின் லக்னோ, கோரக்பூர், வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here