ரசிகரிடம் சத்தியம் வாங்கிய நடிகை

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒரு ரசிகர், ‘உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்களுக்காக நான் சாகத் தயார்’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ‘உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பராக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்’ என்று பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here