பிங் – போங் விளையாடுவதை நிறுத்தி விட்டு தேர்தலை நடத்துங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு அதிகம் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு அதிகம் என அனைவரும் பிங் – போங் பந்து விளையாடுவதை நிறுத்தி விட்டு பொது தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அசிஸ் கேட்டு கொண்டார்.

கோவிட் 19 தொற்றை கட்டுப்படுதிய பின்னர் பொது தேர்தலை நடத்தும் படி அவர் கேட்டு கொண்டார். அதோடு 100 நாட்களில் குறிப்பாக கோவிட் காலக்கட்டத்தில் நாட்டை சிறப்பான முறையில் வழிநடத்தி தலைமைத்துவ ஆற்றலை நிரூபித்து காட்டியிருக்கிறார் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.

மேலும் தமது ஆதரவு டான்ஸ்ரீ முஹிடினுக்கு தான் என்பதையும் அவர் உறுதிப்படுத்திய அவர் தேர்தலை நடத்தும்படியும் முஹிடினை கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here