சுஷாந்துக்கு நடந்தது அன்று சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல வாரிசு நடிகர்கள் சேர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இவ்வாறு செய்து விட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வாரிசு என்பது அரசியலில் மட்டும் கிடையாது, சினிமாவிலும் அதனுடைய தாக்கம் அதிகம். இதேபோன்று மன அழுத்தத்தை தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகருக்கு ஏற்படுத்தியுள்ளனர். டிவியிலிருந்து பிரபலமாகி தற்போது சினிமாவில் பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். குடும்ப ரசிகர்களின் ஆதரவில் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.

ரெமோ படத்திற்கு பிறகு தான் இவருடைய மார்க்கெட் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்தது. ஆனால் அந்த படத்தை வெளியிட பல வாரிசு நடிகர்கள் சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு முறை அவர் மேடையில் அழுதது கூட இன்னும் ரசிகர்கள் மத்தியில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று பாலிவுட் நடிகர் மன அழுத்தம் காரணமாக இறந்ததை பார்த்து சிவகார்த்திகேயன் அன்று அழுததற்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here