முதல் நாளில் RM50 மில்லியன் செலவானது – சாரா உதவிக்கு பெரும் வரவேற்பு

கோலாலம்பூர்:

ஒருமுறை வழங்கப்படும் 100 ரிங்கிட் சாரா ரஹ்மா உதவித்தொகை விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 8.5 லட்சம் மலேசியர்கள் 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவிட்டுள்ளனர்.

பரிவர்த்தனைகளின் திடீர் அதிகரிப்பு காரணமாக MyKasih நெட்வொர்க் மூலம் செயல்படும் கட்டண அமைப்பில் சில இடங்களில் மந்தநிலை ஏற்பட்டது. எனினும், பரிவர்த்தனைகள் தொடர்ந்து செயலாக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 1 முதல் சீரான சேவை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

சாரா உதவித்தொகை 2025 டிசம்பர் 31 வரை பயன்படுத்தக்கூடியது. நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கடைகளில் இந்த உதவி பயன்படுத்தலாம். 18 வயதுக்கு மேற்பட்ட 2.2 கோடி மலேசியர்களின் மைக்காட் அட்டையில் இந்த தொகை சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here