இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலித்த நயாகரா நீர்வீழ்ச்சி

இந்தியா முழுவதும் சுதந்திர தினம் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியா தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதேபோல் கனடா நாட்டில் உள்ள இந்தியர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். குறிப்பாக உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் பிரதிபலிக்கபட்டன.

மூவர்ணக்கொடியின் வண்ணங்களை கொண்ட விளக்குகள் இரவு நேரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது. இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்கவைக்கும் வகையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here