கோவிட் 19 கிருமி தொற்றுக்கு இன்று புதிதாக 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 8 பாதிப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 2 உள்நாட்டு தொற்றாகும்.
இன்று புதிய கிளாஸ்டர் மற்றும் இறப்பு இல்லை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா கூறினார்.
நாடு முழுவதும் 183 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் நால்வருக்கு சுவாச கவசம் தேவைப்படுகின்றன.
மலேசியாவில் இதுவரை மொத்தம் 9,267 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் மொத்தம் 8,959 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இரு தொற்றுகள் கெடா தாவார் பகுதியை சேர்ந்தவையாகும் என்று அவர் கூறினார்.