தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்த இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தமிழ் திரையுலகில் தனது திறைபயணத்தை முன்னனி இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் துவங்கினார். இதன்பின் பல பல வெற்றிப்படங்களை தனது இசையின்முலம் ரஹ்மான் கொடுத்தார் என்று கூட கூறலாம்.
இதை தொடர்ந்து ஹிந்தியில் ஸ்லம் டாக் மில்லினர் எனும் படத்திற்காக ரஹ்மான் உலகில் மிகப்பெரிய விருத என கருதப்படும் ஆஸ்கர் விருதைப் கைப்பற்றினார். இந்நிலையில் தற்போது வரை இவர் திரையுலகின் முலம் சம்பாதித்த சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு. 250 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு படத்திற்கு மட்டும் வாங்கும் சம்பளம் ரு. 9 கோடி என்றும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. பிரபல தளத்தில் வெளிவந்ததை நாங்கள் தொகுத்து வாங்கி இருக்கிறோம்.