மனமுடைந்த தந்தை தற்கொலை!

தென்காசி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பேச்சி அம்மன் தெருவில் வசித்து வருபவர் மாயாண்டி (64) பனை தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வரும் இவருக்கு மனைவி மற்றும் 3 மகள் உள்ளனர். 2 மகள்கள் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வேற்று சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டதால் மாயாண்டி மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில். அவரின் 3வது மகளும் உறவினர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளைய மகளின் காதலுக்கு மாயாண்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும் அவர்களுக்கு கடந்த 28-ந் தேதி வீட்டில் திருமணம் நடந்தது.

இதனால் மிகவும் மனமுடைந்த மாயாண்டி திருமணம் நடந்த மதியம் அன்றே பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here