இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று காலை பிரதமர் மோடியும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அஞ்சலி செலுத்துகின்றனர். அதேபோல் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி 7 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here