தன்னை கொரோனாவில் இருந்து மீட்ட மருத்துவ குழுவினருக்கு, நடிகை தமன்னா நன்றி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் படப்பிடிப்புக்காக, ஐதராபாத் சென்ற போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், தமன்னா. ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார்.இது குறித்து, ‘டுவிட்டரில்’ தமன்னா கூறியதாவது:டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, நான் எவ்வளவு நன்றி உள்ளவளாக இருக்கிறேன் என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் நோய் வாய்ப்பட்டு இருந்தேன், பலவீனமாக இருந்தேன்; பயந்தேன். ஆனால், நான் வசதியாகவும், சிறந்த முறையில் சிகிச்சை பெறவும், மருத்துவ குழுவினர் உதவி செய்தனர். கருணையும், நேர்மையான அக்கறையும், அனைத்தையும் சிறப்பாக ஆக்கியது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.