சினிமா படப்பிடிப்புக்கு தடை விதித்த கிராமத்தினர்

காகிதப்பூக்கள் என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகங்கள் லோகன், பிரியதர்ஷினி ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை முத்து மாணிக்கம் இயக்கி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் அங்கு சென்றனர். ஆனால் கிராமத்தினர் கொரோனா அச்சத்தால் ஊருக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து படக்குழுவினரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதுகுறித்து இயக்குனர் முத்து மாணிக்கம் கூறும்போது, “படப்பிடிப்பு நடத்த விடாமல் கிராமத்தினர் தடுத்தது அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவோ பேசியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தினோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here