- கூச்சிங்: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மாநிலத்திற்குள் வருவதற்குப் பின்னால் சூத்திரதாரி என்று நம்பப்படும் பாக் ஹித்தாம் என்ற நபரை குடிவரவுத் துறை நேற்று அதிகாலை கைது செய்தது.
சரவாக் குடிவரவு இயக்குநர் டத்தோ கென் லெபன், இந்தோனேசியர்களுடன் இரு வேன் வகை வாகனத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இவனை திணைக்களத்தின் விரைவு மறுமொழி குழு (கியூஆர்டி) இங்கிருந்து 515 கி.மீ வடக்கே பிந்துலுவில் அதிகாலை 1.30 மணியளவில் அவ்வனை தடுத்து நிறுத்தியது.
கைது செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக குடியேறிகள் மாநிலத்திற்கு வருவதற்குப் பின்னால் ‘பாக் ஹித்தாம்’ தான் சூத்திரதாரி என்று கண்டறியப்பட்டது என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை நவம்பர் 18 ஆம் தேதி தெற்கு சரவாக் நகரில் உள்ள ஜாலான் லுண்டுவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கைது செய்ததில் தொடர்பானது என்று அவர் மேலும் கூறினார்.
சூத்திரதாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு கியூஆர்டி பின்னர் பிந்துலுவின் ஜாலான் சிபியு என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில் சட்டவிரோதமாக மாநிலத்திற்குள் நுழைந்ததாக நம்பப்படும் 12 இந்தோனேசியர்களைக் கைது செய்தது.
பிரதான சந்தேக நபரால் சரவாக் மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் கைதிகள், சோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வளாகத்திற்கு வந்திருந்ததாக அவர் கூறினார்.
குடி நுழைவுச் சட்டம் 1959/63 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.