வாஷிங்டன்:
அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை , நிதிக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பிடன் முடிவு செய்துள்ளார்.
இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஒருவேளை செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் நிதிநிலை குழு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்கிற பெருமையை நீரா தாண்டன் பெறுவார்.
இந்த நிலையில் நீரா தாண்டனை மேலாண்மை, நிதிக் குழுவின் தலைவராக நியமிப்பதற்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்சபை உறுப்பினர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீரா தாண்டன் கடந்த காலங்களில் ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்களை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும் செனட் சபையில் செல்வாக்குமிக்க உறுப்பினருமான ஜான் கார்னின் இதுகுறித்து கூறுகையில் “ஜோ பிடனின் மிகவும் மோசமான வேட்பாளராக நீரா தாண்டனை நான் பார்க்கிறேன்.