வாராஹி காயத்ரி மந்திரம்

“ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்”

இந்த வாராஹி காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது பஞ்சமி திதி வரும் நாட்களில் 108 முறை ஜெபித்தால், வாழ்க்கையில் தீமைகள் அகலும், நன்மைகள் அதிகரிக்கும்.

வளர்பிறை பஞ்சமி வரும் நாட்களில் வாராஹி வழிபாட்டினை மாலை அல்லது இரவு வேளையில் (குறிப்பாக இரவு 8:00 மணி முதல் 10:00 மணிக்குள்) செய்வது மிகுந்த பலனைத் தரும். பூஜை அறையில் வாராஹி அம்மன் படம் அல்லது விக்கிரகத்தின் முன்பு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அம்மனுக்கு மஞ்சள் நிற அல்லது சிவப்பு நிற மலர்களைச் சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாதுளை பழம், சுண்டல் அல்லது மிளகு கலந்த சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

தடைகள் நீங்க வாராஹி வழிபாடு :

வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் அமர்ந்து அம்மனை வழிபாடு செய்வது உகந்தது. வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை செய்வது நல்லது. அதே போல் முதன் முதலாக வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்கள் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிப்பது நல்லது. வீட்டில் செல்வம் பெருக சாந்த முகத்துடன், அமர்ந்த நிலையில் இருக்கும் வாராஹி அம்மனின் படத்தை வைத்து வழிபடுவது நல்ல பலன்களை தரும்.

வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி, வெற்றிகள் குவிய, பஞ்சமி, அஷ்டமி, செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் வீட்டில் உள்ள அம்மன் படத்தின் முன், தூய தாமரைத் தண்டு திரி அல்லது பஞ்சுத் திரி கொண்டு நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றவும். அம்மனுக்கு உளுந்தினால் செய்யப்பட்ட உளுந்து வடை (தோல் நீக்காதது) மற்றும் மிளகு கலந்த தயிர் சாதம் நைவேத்தியமாகப் படைப்பது மிகவும் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here