ராமேஸ்வரம் மீனவர்கள் நிறுத்தம் அறிவிப்பு!

அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. எல்லைத் தாண்டுவதாக கூறி மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில், ராமேஸ்வர மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.

நேற்று ராமேஸ்வரம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்கள் எல்லைத் தாண்டியதாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் 3 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை கடலுக்கு செல்ல மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here