புதுடெல்லி:
பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிகமாகத் தடை செய்துள்ளன. இந்தியாவில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை விமான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.