ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக புத்தகக்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில் பபாசி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், சென்னை புத்தககாட்சி இந்தாண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடத்த பபாசி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் நடத்த நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது.
நந்தனம் ஒய் . எம் . சி . ஏ திடலில் நடக்கும் இப்புத்தககாட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர் .
ஏற்கனவே தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் , அதை முழுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர் .