கோலாலம்பூர்:
ஜாலான் சுல்தான் இஸ்மாயில் மற்றும் ஜாலான் அம்பாங்கில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு வளாகங்களில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இரண்டு மலேசியர்கள் மற்றும் அந்த வளாகத்தில் பணிபுரிந்ததாகக் கருதப்படும் வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறினார்.
“தகவல் மற்றும் உளவுத்துறை நடவடிக்கையின் விளைவாக இந்த சோதனை நடத்தப்பட்டது என்று கூறிய அவர், கைது செய்யப்பட்ட அனைவரும் 22 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரண்டு உள்ளூர் பிரஜைகள் டிசம்பர் 20 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 26 வெளிநாட்டு பிரஜைகள் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“இந்த வழக்கு 1992 ஆம் ஆண்டின் பொழுதுபோக்குச் சட்டம் (கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசம்) பிரிவு 4 (1), குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55 பி மற்றும் குடியேற்ற விதிமுறைகள் 1963 இன் விதிமுறை 39 (பி) ஆகியவற்றின் படி விசாரிக்கப்படுகிறது” என்று கூறினார்.
“சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொள்கிறது,” என்றும் அவர் கூறினார்.