தமிழைத் தமிழாய் மதிக்காமல்- ஏதோ,
தத்துப் பிள்ளை வளர்ப்பாக;
உமிழ்ந்து பேசும் தமிழாரே!- மனம்
உணரா திருத்தல் சரிதானா?
பெற்ற அன்னை படுந்துன்பம்- கண்ணில்,
பட்டும் அறியா துறக்கத்தில்,
சற்றும் அறியா திருப்பதினால்- நெளி
சாக்கடை புழுக்களும் மதிக்காதே!
பெற்றவள் மற்றவள் போலல்ல!- தமிழ்,
பெற்றவ ரெல்லாம் குலதெய்வம்!
குற்றம் ; என்றும் அறிந்தும் நீ – தினம்,
கொள்கை யாக்கிக் கொளல் பாவம்!
தமிழோய்! தமிழ்தான் தமிழாகும் – அந்தத்
தமிழ்தான் பிறைப்பைத் தரங்காட்டும்!
அமிழ்தாய் கிடைத்தும் அருந்தாமல் – வேற்றை,
அமுதாய் அருந்தல் குலநாசம்?
– வீர. கா. அருண்மொழித்தேவன்