செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 203 மாணவர்கள் வருகை

செனாவாங்

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் எண்ணிக்கை, இதற்கு முன்னைய ஆண்டுப் போல அதிகரித்திருப்பது பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளி மீது வைத்துள்ள நம்பிக்கை என அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முரளி முனியாண்டி கூறினார்.

பாலர்ப்பள்ளிக்கு 50 பேர், முதலாம் ஆண்டுக்கு 84 பேர் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு 99 பேர் என ஆக மொத்தம் 233 மாணவர்களில், நேற்று முன் தினமான முதல் நாள் பள்ளியின் போது 202 மாணவர்கள் பள்ளி வருகை தந்தார்கள்.

கோவிட்-19 பெருந்தோற்றின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நேற்று முன் தினம் தொடங்கி முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர், மாணவர்களின் குதுகலத்துடன் பள்ளி திறக்கப்படுவதில் ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை காணமுடிகிறது என முரளி தொடர்ந்து கூறினார்.

நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here