இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை நாளை முதல் கிலோவிற்கு RM2-3 வரை குறைகிறது

புத்ராஜெயா:

நாளை புதன்கிழமை (மார்ச் 20) முதல் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் சில்லறை விலையை RM2 முதல் RM3 வரை குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இது வாழ்க்கைச் செலவீனத்துக்கான தேசிய நடவடிக்கை கவுன்சிலின் (Naccol) பரிந்துரையை மூலம் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் தற்போதைய விலை 10 கிலோ பொதி ஒன்றிற்கு RM38 முதல் RM45 வரை உள்ளதாகவும், இன்று (மார்ச் 19) நடைபெற்ற Naccol கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட விலை மாற்றத்துடன், நாளை RM35 ஆக குறையும் என்றும் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.

“இந்த நடவடிக்கை மலேசியர்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது, குறிப்பாக ரமலான் மாதம் மற்றும் வரவிருக்கும் நோன்புப்பெருநாள் பண்டிகைகளின் போது அவர்களுக்கு உதவியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here