கோலாலம்பூர்: தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் டத்தோ சைஃபுதீன் அப்துல்லாவிற்கு நேற்று கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சைஃபுதீன் இப்போது பரிந்துரைத்தபடி தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார். மேலும் சுகாதார அமைச்சினால் அவர் கண்காணிக்கப்படுவார். சைபுதீனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டு அவரது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக காத்திருக்கும்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்.
சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும், சைஃபுதீன் அமைச்சின் விவகாரங்களை தொடர்ந்து கண்காணித்து அது சீராக நடப்பதை உறுதி செய்யும் என்று அது கூறியது.
அவர் குணமடைய பிரார்த்தனை செய்த அனைத்து தரப்பினருக்கும் சைஃபுதீன் நன்றி தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரினார்.