கோவிட்-19 கட்டுப்பாடுகள்

கடுமையாகக்கூடும்!- ஓர் எச்சரிக்கை

சிங்கப்பூர்-
புதிய கிருமிப் பரவல் திரள்களை ஒழிக்க தேவைக்கேற்ப கோவிட்-19க்கு எதிரான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் கடுமையாக்க வேண்டி வரலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

பொருளியலை முடக்கக்கூடிய ‘சர்கிட் பிரேக்கர்’ எனப்படும் கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான நடவடிக்கையின் இரண்டாவது கட்டத்தை இதன்மூலம் தவிர்க்கமுடியும் என்றார் அவர்.

மே தினப் பேரணியில் பங்கேற்றபின்  தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய  லீ, அரசாங்கத்துடன் சேர்ந்து கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிங்கப்பூரர்கள் ஈடுபடுவார்கள் என்றும் விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை அவர்கள் கைவிடமாட்டார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கிருமி உருமாற்றம் பெற்று வருவதால் சிங்கப்பூரின் கோவிட்-19 சூழ்நிலை வேகமாக மோசமடைந்துவிடலாம் என அவர் எச்சரித்தார்.

சிங்கப்பூர் மக்கள் கோவிட் தொற்றுத்திரள் பரவலில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று  எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here