பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் திங்கள்கிழமை (மே 17) 4,446 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தமாக 474,556 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு டூவிட்டரில், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 1,650 நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள மாநிலமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து சரவாக் (433) மற்றும் ஜோகூர் (391).
இன்று 2,784 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 45 பேர் கோவிட்-19 தொற்றினால் மரணமடைந்துள்ளனர். தற்பொழுது 43,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 522 பேர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 273 பேர் வெண்டிலேட்டர் ஆதரவில் இருக்கின்றனர்.