–இலக்கிய மாமணி விருது:
அரசு அறிவிப்பு
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூவரை தேர்வு செய்து விருது வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய , மாநில விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் கனவு இல்லம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.