வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கோவிட் தடுப்பூசி கடப்பிதழை அறிமுகம் செய்யும் ஜப்பான்.

தோக்கியோ (ஜூன் 19) : கோவிட் -19 தொற்றினை கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.
தற்போது அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் அதிதீவிரம் காட்டி வருகின்றது.

மேலும் அனைத்துலக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டும் குறைக்கப்பட்டும் உள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை தம்முடன் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகள் அறிவிப்பு வெளியிட்டும் வந்தன.

இந்நிலையில் ஜப்பான் தனது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இலகுவாக, தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா தடுப்பு கடப்பிதழை  வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ஜப்பானிய அரசின் செய்தித் தொடர்பாளர் கத்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here