இன்று 24 மணி நேரத்தில் 84 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி!

பெட்டாலிங் ஜெயா ( ஜூன் 24) :

கடந்த 24 மணி நேரத்தில் 5,841 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் 84 பேர் இந் நோய்க்கு பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தலைமை அதிகாரி டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 5,411 பேர் இந் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக நோயிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 650,964 ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை இப்போது 716,847ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் .

தற்போது 61,162 பேருக்கு இத்தொற்றுள்ளது என்றும் 869 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர், 438 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 84 இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் நடந்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,721 ஆக உயர்ந்துள்ளன.

மேலும் சிலாங்கூரில் 2,072 பேர் இன்று புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவற்றில் 1,017 பேர் 237 கோவிட் -19 கொத்தாணிகளுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (781), சரவாக் (581), ஜோகூர் (346), கோலாலம்பூர் (552), பேராக் (120), கிளந்தான் (135), கெடா (271), சபா (203), லாபுவான்(212) , பினாங்கு (108), மலாக்கா (247), திரெங்கானு (29), பஹாங் (162), புத்ராஜெயா (17), பெர்லிஸ் (5).

இன்று 5,833 உள்ளூர் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன். இதில் 4,683 மலேசியர்கள் மற்றும் 1,150 வெளிநாட்டினர் உள்ளனர். மேலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் அடங்குவர்.

மேலும் இறந்த 84 பேரில் 73 மலேசியர்களும் 11 வெளிநாட்டவர்களும் அடங்குவர், இறந்தவர்கள் அனைவரும் 8 வயது முதல் 90 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தேரிவித்தார். மேலும் 11 பேர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஜூன் 20 முதல் ஜூன் 22 வரை புதிய கோவிட் -19 வகைகள் கண்டறியப்பட்டதாகவும் நூர் ஹிஷாம் கூறினார். அத்தோடு 5 பேர் பீட்டா வகை வைரஸ் தொற்றுக்கும் (பி .1.351) மற்றும் ஒருவர் டெல்டா (பி .1.617.2) தொற்றுக்கும் உள்ளாகியிருப்பது கவலையளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here