மனைவி வேலைக்குச் சென்ற பின் 16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை. கிளந்தானில் சம்பவம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16:

கிளந்தானில் உள்ள பாசீர் பூத்தே என்ற இடத்தில் 51 வயது நபர் தனது மனைவி வேலைக்குச் சென்றிருந்த்த வேளை தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அவரது மகள்(16), போலீஸில் ஓர் அறிக்கையை பதிவு செய்ததைத் தொடர்ந்து , அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களாகவே தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்ததாக பாசீர் பூத்தே காவல்துறைத் தலைவர் முகமட் அஸ்மிர் டமிரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் மற்றும் மூன்று உடன்பிறப்புகளுடன் வசித்து வந்தார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரின் படுக்கையறைக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் அறியமுடிகின்றது என்றும் கூறினார்.

“மற்ற உடன்பிறப்புகள் தூங்கிய பின்னர், அவரது தாய் வேலைக்குச் சென்று விட்டதன் பின்னரே அவர் அந்தப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் இவ்விடயத்தை வெளியில் சொன்னால் தனது தந்தை திட்டுவார் அல்லது அடிப்பார் என்று பயப்பட்டதனாலேயே தனக்கு என்ன நடக்கிறது என்று யாரிடமும் சொல்லவில்லை என்றும் அஸ்மீர் கூறினார்.

நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வரும் ஜூலை 22 வரை ஏழு நாட்கள் போலீஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 பி இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here